Friday, October 31, 2014

1.4. உள்ளுக்குள்ளே புகுந்து பாரு

உள்ளுக்குள்ளே புகுந்து பாரு
(மெட்டு: சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்- மன்னவன் வந்தானடி)

*** Please read the song along with the original Song ***



உள்ளுக்குள்ளே புகுந்து பாரு 
சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
(1+SM+1)

கோவிலில் மட்டும் இல்லை சாமி அவன்
நெஞ்செனும் கோவில் கொண்டான் உள்ளே
(2)
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
(MUSIC)
கக்கத்தில் தண்டு கொண்டு கமண்டலம் எடுத்து
காட்டுக்குத் தவம்-செய்யப் போவதும் எதற்கு
கட்டை விரல் அளவில் சுடர் விட்டுள் இருக்கு
அய்யா என்று உரைத்தானே *வேதத்தில் நமக்கு
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு .. ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு

( MUSIC )
கன்னத்தில் போட்டுக் கொள்ள நீ காட்டும் சூடம்
அன்பில்லை என்றால் அது வெறும்-வெளி வேடம்
அன்றைக்கே சொல்..லிவைத்த திந்த-நல்ல பாடம் (1+SM+1)
ஆமாம் ஆண்டவன் அளித்ததன்றோ ரிஷிகள் தந்தவேதம்  
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
( MUSIC )
உள்ளத்தைக் கேட்டுப் பாரு அது-சொல்லும் விவரம்
அது-சொல்லும் பாஷை-உன்-ஒ..ருத்தனுக்குப் புரியும்
ஞாயத்தைச் சொல்லும் நல்ல குரு-உந்தன் இதயம் (2)
உன் உள்ளேநீ தேடு-நல்ல உபதேசம் கிடைக்கும்
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு 
கோவிலில் மட்டும் இல்லை சாமி அவன்
நெஞ்செனும் கோவில் கொண்டான் உள்ளே
உள்ளுக்குள்..ளே-புகுந்து பாரு சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
சாமி ஏனுன்னு வந்துனைக்-கேட்..பாரு
பாரடா உள்ளே சென்று பாரு (3)..
_________________

*கதோபநிஷத்

No comments:

Post a Comment