Sunday, March 18, 2012

துங்கா தீர விராஜம்



துங்கா தீரமதில் தூங்கா திருந்திருக்கும்
மங்கா ஒளிவிளக்காய் முகத்தில் சிரிப்பிருக்கும்
மந்த்ரா லயம்தனிலே அழகாய் வீற்றிருக்கும்
இறவாத் துறவிகள்தம் அரசாய்ப் பெற்றிருக்கும்
மறவா திருக்கநெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
திருராக வேந்திரரை மனம்தன்னில் துதித்திருநீ


கையில் கமண்டலமும் தண்டும் ஜபமணியும்
மெய்யில் அழகுதரும் காவிஉடையி னொடும்
கழுத்தில் துளசிமணி அழகுமிகு மாலைகளும்
விழுப்பம் கொடுத்திருக்கும் அழகின் வடிவுடனும்
இழக்கும் ஏதுமிலா வண்ணம் யாவையுமே
தொழுதே இறையடியில் கொடுத்தே சிறப்பெனவே
இருக்கும் குருராஜன் பாதம்தனில் பணிமனமே
பிறக்கும் இறக்குமந்த மாயை விலகிடுமே..!


_________________












No comments:

Post a Comment