Friday, October 31, 2014

1.1. எங்கு தான் இருக்கிறான் இறைவன்






கல்லும்மண்ணும் சேர்ந்த-காரைக் கட்டிடத்தி லேஉறை
செய்யுகின்ற தாகுமாஉன் கண்படாத வாலிறை
பொன்னும்-பொருளும் தந்துவாங்கும் பொருளுமாகு..மாஇறை
சொன்..னசொல் கவர்ச்சியால் மயக்கும்பேச்சி லாஇறை
உன்னிலே இருக்குமுந்தன் நெஞ்சிலவனைக் காணலாம்
கண்ணிலே வடிக்கும்நீரி..ரக்கமாகக் காணலாம்
மண்ணிலே இருக்கும்மற்ற மாந்தரின் துயர்தனைக்
கண்டுமே துடிக்குமீர நெஞ்சிலவனைக் காணலாம்

______________________________


No comments:

Post a Comment