Friday, October 31, 2014

14. நான் யார்


நான் யார்
(மெட்டு:என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே)

*** Please read the song along with the original Song ***





என்னதான் நான் எனும் நினைப்பாலே
குருடனாய் நீயும் அலைந்தாலும்
தன்னாலே அடங்குமுன் தலைகனமே
இளமை வரையில்தான் உன்-திமிரே
(2)
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
(MUSIC)

முன்னாலே நடந்தது புரியாது
பின்னாலே நடப்பது தெரியாது
(2)
நடுவினிலே உன் “நான்” யாரு
நன்கிதை நினைத்தே நீ பாரு (1+SM+1)
என்னதான் நான் எனும் நினைப்பாலே
குருடனாய் நீயும் அலைந்தாலும்
தன்னாலே அடங்குமுன் தலைகனமே
இளமை வரையில்தான் உன்-திமிரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
(MUSIC)

உலகத்தில் இருப்பது ஒரு பாதி
விண்ணென இருப்பது சரி பாதி
(2)
அவனன்றி வேறெத..டா-மீதி
தினம் எகிறாதே துள்ளிக் குதிக்காதே + SM
எகிறாதே துள்ளிக் குதிக்காதே
அட.. என்னதான் நான் எனும் நினைப்பாலே
குருடனாய் நீயும் அலைந்தாலும்
தன்னாலே அடங்குமுன் தலைகனமே
இளமை வரையில்தான் உன்-திமிரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே
(MUSIC)

மனம்வரும் அகந்தையைக் கிள்ளி எடு
தினம்அவன் திருப்பெயர் சொல்லி விடு
(2)
கிடைக்கின்ற வரையில் திருப்திப் படு
அவன்பதத்..தில்-சரண் புகுந்துவிடு (1+SM+1)
அட.. என்னதான் நான் எனும் நினைப்பாலே
குருடனாய் நீயும் அலைந்தாலும்
தன்னாலே அடங்குமுன் தலைகனமே
இளமை வரையில்தான் உன்-திமிரே
எனச் சொல்லி அருளினார் சங்கரரே


No comments:

Post a Comment