Saturday, November 1, 2014

17. சரணம் சரணம் சரணம் கண்ணா


சரணம் சரணம் சரணம் கண்ணா

உலகில்-தோன்றும் எதுவும்-என்னை உதறவேநீ சொல்கிறாய் 
புலனில்-தோன்றும் ஆசையாவும் பற்றிடாதே என்கிறாய் 
களத்தில்-போரில் மனதில்-அமைதி கொண்டு-நீயும் நிற்கிறாய் 
உளத்தில்-உன்னை கொள்ள-எதுவும் முடியும்-என்றும் சொல்கிறாய்

பிறப்பில்-உயர்ந்த தெய்வத்-தோன்றல் பார்த்தன்கூட கலங்கினான் 
புரிவதாக இல்லைநீயும் கூறியது என்கிறான் 
குறைவதான அறிவிலுன்னை எப்படிநான் அறிவது 
உறைவதாக மனதிலுன்னை எப்படிநான் அழைப்பது 

பேயாய்-மனது அடங்கிடாமல் அலைந்திடவே செய்யுது 
நாயாய்-மீண்டும் வாலைக்குழைத்து மேடுநோக்கி செல்லுது 
நோயாய்-யாண்டும் செய்த-கருமம் பற்றி-என்னைத் தொடருது
வாயால்-நானும் கதறிடவே சோர்வில்-மனதும் ஓயுது 

சபையிலன்று அழைத்த-குரலில் இரக்கம்கொண்ட கண்ணனே 
கஜனின்-குரலில் துக்கம்-கேட்டு இறங்கி-வந்த மன்னனே 
விரைவிலிரங்கி கருணை-காட்டு உறங்கிவாழும் என்னிடம் 
புரிவதாக வழியைக்காட்டிச் சேர்த்துக்கொள்நீ உன்னிடம்..!

*மேடு = குப்பை மேடு என்பதாகும் புலன் வழி பற்று
__________________

No comments:

Post a Comment