Thursday, March 31, 2016

1.15 தர்மம்






தர்மம்-தன்னைக் காக்க-தர்மம் வந்து-உன்னைக் காக்குது
இந்த-தர்மம் செய்தி-என்று என்ன-உனக்குச் சொல்லுது
தர்மம்-தன்னைக் காப்பதென்ப துன்னை-நீயே காப்பது
உன்னைக்-காக்க பிறரைக்-காக்க வேண்டும்-என்று அறிந்திடு
லோகம்-முழுதும் சுகித்தல்-வேண்டி நடத்தும்-பூஜை கடந்து-நீ
அகில-லோகம் அனைத்தும்-சுகிக்க வேண்டும்-நிலைக்கு உயர்ந்திடு

பிறரில்-உன்னைக் காணலே-உன் உள்ளத்-தூய்மை சாதனம்
அவரில்-தோன்றும் குறைகள்-உன்-உள் உண்டு-என்று அறிந்துநீ
இயன்ற-வரை முயன்றிடு முயன்று-பார்த்து களைந்திடு
பயின்ற-யோக..மாய்-இதை தெளிந்த-யோகி கூறுவர்
கனன்ற-தீயில் தூசென மாசு-உன்னில் போய்விட
எனது-என்று ஒன்றிலை என்று-சித்தம் ஆய்விட
மனதும்-செத்து ஓய்ந்திட சித்தின்-வித்த..றுந்திட
கணத்தில்-தோற்ற..மாகிடும் துலங்கு-ஞான ஞானமே

_______________

No comments:

Post a Comment