Tuesday, December 6, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 21 - 30



 21. (191-199)
மரீசிர்த³மனோ ஹம்ஸ: ஸுபர்ணோ பு⁴ஜகோ³த்தம: ।
ஹிரண்யனாப:⁴ ஸுதபா: பத்³மனாப:⁴ ப்ரஜாபதி: ॥ 21 ॥

பிரித்தெடுக்கு  மன்னமாய் அழைத்துச்செல்லும் வண்ணமாய்
சிறகுகொண்ட  பறவைநீ ஆதிசேஷன் மன்னன்நீ
பொன்னின்வண்ண நாபியில் மின்னிநிற்கும் தாமரை
தன்னில்தோன்ற லாகவே உயிர்படைத்த அறிவுநீ

 22. (200-210)
அம்ருத்யு: ஸர்வத்³ருக் ஸிம்ஹ: ஸன்தா⁴தா ஸன்தி⁴மான் ஸ்தி²ர: ।
அஜோ து³ர்மர்ஷண: ஶாஸ்தா விஶ்ருதாத்மா ஸுராரிஹா ॥ 22 ॥

அழிவிலாத வழியவன்  யாவும்நோக்கும் விழியவன்
ஊழிலே அழிப்பவன் செயலில்பலனை  இணைப்பவன்
ஈரவிழி கொண்டநெஞ்சின் பக்தருக்குத்  துணையவன்
*உரப்படவே அவர்கள்நெஞ்சில் என்றும்நிலைத் திருப்பவன்

தடைகள்களையு மிவனையே வெல்லஎவரு மில்லையே
விரிந்த அண்டமாள்பவன்  சிறந்தமறையில் வாழ்பவன்
புரிந்தகோரச் செயல்களால் பிறந்தஅசுரர் யாவர்க்கும்
ஒருத்திருக்கும் பாதகன் கீதைசொன்ன போதகன்

*உரப்படவே = திடமாக

 23. (211-219)
கு³ருர்கு³ருதமோ தா⁴ம ஸத்ய: ஸத்யபராக்ரம: ।
நிமிஷோனிமிஷ: ஸ்ரக்³வீ வாசஸ்பதிருதா³ரதீ⁴: ॥ 23 ॥

குருவிற்சிறந்த  குருவவன் குருவினுக்கே குருவவன்
சிறந்ததா யிருக்கும்யாவும் தங்குகின்ற உறைவிடம் 
தோன்றிநிற்கும்  உண்மையாம்  தோற்றிடாத வீரவான்
யோகம்கொண்டு கண்களை மூடித்தோன்றும் யோகியாம்
அறிந்துநோக்கும் திறமையில் திறந்திருக்கும்  கண்ணனாம்
மலர்ந்த  மாலைசூடுவான் விரிந்ததான ஞானவான்

 24. (220-229)
அக்³ரணீக்³ராமணீ: ஶ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்தா⁴ விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ॥ 24 ॥
  
விளங்கயாவும் சொல்லுவான் வழிநடத்திச் செல்லுவான்
துலங்குதிருவின் பதியிவன் நீதிக்குமோர் கதியிவன்
உலகம்யாவும் இவன்வசம் உயிர்கள்உள்ளே இவன்நிசம்
நூறின்நூறு மடங்குமாய் தலையும்பதமும்   கொண்டவன்
கூரின்விழிகள் ஆயிரம் கொண்டநல்ல கண்ணனாம்
பாரிலுறையும் யாவிலும் உள்ளிருக்கும் உயிருமாம்

 25. (230-237)
ஆவர்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த³ன: ।
அஹ: ஸம்வர்தகோ வஹ்னிரனிலோ த⁴ரணீத⁴ர: ॥ 25 ॥

உலகமாயை நடத்துவான் அதுவும்கடந்து கிடப்பவன்
மறைந்துஎங்கும் விளங்குவான்  இருளைப்போக்கும் விளக்கவன்
ஒளிரும் *ஆதியானவன்  அதனில்தீயு மானவன்
உயிரின்மூச்சுக் காற்றவன் புவியைத்தாங்கி காத்தவன்

*ஆதியானவன் = ஆதித்யன் = சூரியன்


 26. (238-247)
ஸுப்ரஸாத:³ ப்ரஸன்னாத்மா விஶ்வத்⁴ருக்³விஶ்வபு⁴க்³விபு⁴: ।
ஸத்கர்தா ஸத்க்ருத: ஸாது⁴ர்ஜஹ்னுர்னாராயணோ நர: ॥ 26 ॥

 உலகில்வாழும்  யாவருக்கும் நற்பலன்கள் தருபவன்
மலர்ந்தபளிங்கு மனத்தினன்   விளங்குமுலகு படைத்தவன்
சென்றுஉயிரில் உறைபவன்  அவற்றைக்காவல் புரிபவன் 
சான்றோர்பெருமை காப்பவன் அவரால்வணங்கப் படுபவன்
பக்தர்சொல்லைக் கேட்பவன் மற்றோரிடத்தில் மறைபவன் 
உயிர்கள்அனைத்தும் காப்பவன் அவற்றைநடத்தி செல்பவன்  

 27. (248-256)
அஸங்க்³யேயோப்ரமேயாத்மா விஶிஷ்ட: ஶிஷ்டக்ருச்சு²சி: ।
ஸித்³தா⁴ர்த:² ஸித்³த⁴ஸங்கல்ப: ஸித்³தி⁴த:³ ஸித்³தி⁴ ஸாத⁴ன: ॥ 27 ॥
 

அடங்கிடாத அளவவன்  அறிந்திடவே அரியவன்
அடியவர்க்குப்  பெரியவன் பெருமைகொண்டு சேர்ப்பவன்
பிடித்தமான யாவும்கொண்டு விளங்கிநிற்கும் தூயவன்
நடத்திடுவான்  நினைப்பதை கொடுத்தருள்வான்  கேட்டதை
கடைப்பிடிக்கும் யோகம்தன்னில் இனிமைகொண்டு சேர்ப்பவன்

 28. (257-265)
வ்ருஷாஹீ வ்ருஷபோ⁴ விஷ்ணுர்வ்ருஷபர்வா வ்ருஷோத³ர: ।
வர்த⁴னோ வர்த⁴மானஶ்ச விவிக்த: ஶ்ருதிஸாக³ர: ॥ 28 ॥


சிறந்ததர்ம மானவன் தர்மத்திலே ஒளிர்பவன்
பிறந்தயாவும் உள்ளிருந்து யாவுமாகத் திகழ்பவன் 
தர்மம்செல்லப்  படியவன் தர்மம்கொள்ளும் படியவன்
பிறப்புவளரக் காரணன் சிறந்துவளரும் பூரணன்
இறப்பிலாத இனியவன் சிறந்ததொரு தனியிவன்
ஆறுகளாம் வேதங்களும் சென்று சேரும் கடலவன்  

29. (266-275)
ஸுபு⁴ஜோ து³ர்த⁴ரோ வாக்³மீ மஹேன்த்³ரோ வஸுதோ³ வஸு: ।
நைகரூபோ ப்³ருஹத்³ரூப: ஶிபிவிஷ்ட: ப்ரகாஶன: ॥ 29 ॥

எதையும்தாங்கும் தோளவன்  மறுக்கவொண்ணா  சிறப்பவன்
வேதம்தந்த  தாயவன்  வேதத்துக்கே நாயகன்
சிறந்தபொருளும்  ஆனவன்  இரந்தபொருள்கள் தருபவன்
தெரிந்துஅவனை அடைபவர்க்கு அருளுமாகத் தெரிபவன்
விரிந்திருக்கும் பற்பலத்  தோற்றம்கொண்ட கொற்றவன் 
கதிரினுள்ளே ஒளியவன் யாவிலுமே ஒளிர்பவன்

30. (276-283)
ஓஜஸ்தேஜோத்³யுதித⁴ர: ப்ரகாஶாத்மா ப்ரதாபன: ।
ருத்³த:³ ஸ்பஷ்டாக்ஷரோ மன்த்ரஶ்சன்த்³ராம்ஶுர்பா⁴ஸ்கரத்³யுதி: ॥ 3௦ ॥

எளிமைகொண்ட பலமவன்  திறமைகொண்ட வீர்யவான்
ஒளிர்ந்துநின்று தெரிபவன் எரித்துபகை முறிப்பவன்
முழுமைகொண்ட அற்புதம் எழும்நல்வேதச் சொற்பதம்
விழுமியஒலி  மந்திரன் அழகியஒளிச்  சந்திரன்
உலகுமெங்கும் ஒளிதனை அளிக்குமொரு ஆதவன் 
_____________________________

 Prev            First           Next


No comments:

Post a Comment