Wednesday, December 7, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 61 - 70




61. (572-580)
ஸுத⁴ன்வா க²ண்ட³பரஶுர்தா³ருணோ த்³ரவிணப்ரத:³ ।
தி³வ:ஸ்ப்ருக் ஸர்வத்³ருக்³வ்யாஸோ வாசஸ்பதிரயோனிஜ: ॥ 61 ॥

அற்புதவில் ராமனாம்  சிறந்த பரசுராமனாம்
அறவழியில் சென்றிடாதோர் அஞ்சுகின்ற அரசனாம்
பெருத்தசெல்வம் உடையவன் பறந்துஎங்கும் நிறைபவன்
அறிந்ததீர்க்க தரிசியாம் பகுத்திடுவான் வரிசையாய்
சொல்லின் செல்வனானவன் பிறந்திடாத ஒர்மகன்
                
62. (581-592)
த்ரிஸாமா ஸாமக:³ ஸாம நிர்வாணம் பே⁴ஷஜம் பி⁴ஷக் ।
ஸன்யாஸக்ருச்ச²ம: ஶான்தோ நிஷ்டா² ஶான்தி: பராயணம்। 62 ॥


சாமவேத மானவன் வேதம்சொன்ன நாயகன் 
வேதமோதும் பக்தர்களைக் காத்துமேநிற் பானிவன் 
இன்பம்நல்கும் மன்னவன் துன்பப்பரி காரமாம் 
உயிரின்நோய்கள் தீர்க்கும்நல் மருத்துவனும் ஆனவன்
மனதின்ஆசை நோய்கள்வேர் அறுத்தெறியும் ஒருவனாம்
விளையும் சாந்தமானவன்  ப்ரளயத்திலும் காப்பவன்
அமைதியான ஜோதியாம் அடைவதான பாதையாம்
                       
63. (593-602)
ஶுபா⁴ங்க:³ ஶான்தித:³ ஸ்ரஷ்டா குமுத:³ குவலேஶய: ।
கோ³ஹிதோ கோ³பதிர்கோ³ப்தா வ்ருஷபா⁴க்ஷோ வ்ருஷப்ரிய: ॥ 63 ॥

யோகவங்க மானவன் யோகப் பலனுமானவன்
யாவும்படைத்த ஆண்டவன் அதிலேமகிழ்ச்சி பூண்டவன்
யோகநித் திரைதனில் விழித்திருக்கு முணர்வினன்
போகத்திலே மூழ்கிநிற்கும்  மண்ணுலகின்   காவலன்
சாகாவரம் கொண்டதேவர் விண்ணுலக இந்திரன்
லோகம்காக்கும் வழியவன் கருணைகொண்ட விழியவன்
அறம்தனில் களிப்பவன் அறம்தழைக்க வைப்பவன்

64. (603-611)
அனிவர்தீ நிவ்ருத்தாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சி²வ: ।
ஶ்ரீவத்ஸவக்ஷா: ஶ்ரீவாஸ: ஶ்ரீபதி: ஶ்ரீமதாம்வர: ॥ 64 ॥

திறத்துடன் மறத்திலே படாமலே படர்ந்தறம்
புறக்கணித் திடாமலே புலன்தனில் படாமலே
புலம்தனை  மடக்குவான்  ழ்தனி லடக்குவான்
பக்தருக்கு நல்லவை என்றுமேய ருள்பவன்
சித்தத்திலே பக்திசெய்ய தூய்மைதரும் சிவனிவன்
நெஞ்சில்பக்தர் எண்ணமே தினமும்கொண்டி ருப்பவன் 
துஞ்சிடவே திருமகள் தன்னைநெஞ்சில் கொண்டவன் 
மிஞ்சிடவே ஒருவரற்ற சிறந்தநிபுண னானவன்
ஞானம்கொண்ட ஞானியரில் சிறந்தஞானி யானவன்

65. (612-620)
ஶ்ரீத:³ ஶ்ரீஶ: ஶ்ரீனிவாஸ: ஶ்ரீனிதி⁴: ஶ்ரீவிபா⁴வன: ।
ஶ்ரீத⁴ர: ஶ்ரீகர: ஶ்ரேய: ஶ்ரீமாம்ல்லோகத்ரயாஶ்ரய: ॥ 65 ॥

திருவைஎன்றும் தருபவன் திருவின்அரச னானவன்
திருவின்வாச மானவன் திருவுமானத்  திருவவன்
திருவின்பெருமை ஓங்கச்செய்யும் திறமைகொண்ட பெருமகன்
திருவைத்தரித்த திருமகன் திருவைஉரு வாக்குவான்
திருவினுக்கே திருவளிக்கும் மூவுலகின் நாயகன்


66. (621-629)

ஸ்வக்ஷ: ஸ்வங்க:³ ஶதானந்தோ³ நன்தி³ர்ஜ்யோதிர்க³ணேஶ்வர: ।
விஜிதாத்மாவிதே⁴யாத்மா ஸத்கீர்திச்சி²ன்னஸம்ஶய: ॥ 66 ॥

சிறந்த விழியைக் கொண்டவன் மிகுந்த எழிலின் உடலவன்
ஆ னந்தமய மானவன் என்றும்களி   கொள்பவன்
விண்ணுலகின் தேவனாம் மனதையடக்கும் மாயனாம்
பக்தர்க்கடங்கும் பாசனாம் உண்மைக்குமோர் நேசனாம்
சித்தத்திலே தோன்றும்ஐயம் களைந்தெடுக்கும் ஐயனாம்

67. (630-638)
உதீ³ர்ண: ஸர்வதஶ்சக்ஷுரனீஶ: ஶாஶ்வதஸ்தி²ர: ।
பூ⁴ஶயோ பூ⁴ஷணோ பூ⁴திர்விஶோக: ஶோகனாஶன: ॥ 67 ॥

யாரும்காணப் பூவுலகில் அவதரிக்கும் தெய்வமாம்
எதையும்எதிலும் காணுகின்ற  திறம்படைத்த ஒருவனாம்
தனக்குமேலோர் தலைவனற்ற ஆதியான தலைவனாம்
அன்பில்வழி கூப்பிடவே எதிலும்தோன்றி  அருளுவான்  
அலங்கரிக்கப் படுபவன் எதையுமலங் கரிப்பவன்
துக்கமற்று இருப்பவன் துக்கம்போக்கிச் சிரிப்பவன்

68. (639-647)
அர்சிஷ்மானர்சித: கும்போ⁴ விஶுத்³தா⁴த்மா விஶோத⁴ன: ।
அனிருத்³தோ⁴ப்ரதிரத:² ப்ரத்³யும்னோமிதவிக்ரம: ॥ 68 ॥

மிளிரும்ஒளியின் தோற்றமாம் வழிபடவே ஏற்றவன்
யார்க்குமாசை மூட்டுவான் ஆசையற்ற தூயவன்
தடைபடாத ஒன்றிவன் இணையிலாத நிபுணனாம்
மிகுந்தவலிமை யுடையவன் வானளந்து நின்றவன்

69. (648-656)
காலனேமினிஹா வீர: ஶௌரி: ஶூரஜனேஶ்வர: ।
த்ரிலோகாத்மா த்ரிலோகேஶ: கேஶவ: கேஶிஹா ஹரி: ॥ 69 ॥

காலம்கடந்த தலைவனாம் துணிவுமிக்கத்  திருமகன்
மூவுலகைப் படைத்தவன் மூவுலகின் நாயகன்
மோக்ஷமருளும் கடவுளாம் அசுரர்மிரளும் பொருளுமாம்
பக்தர்துன்பம் போக்குகின்ற பக்தவத்ச லன்இவன்

70. (657-666)
காமதே³வ: காமபால: காமீ கான்த: க்ருதாக³ம: ।
அனிர்தே³ஶ்யவபுர்விஷ்ணுர்வீரோனந்தோ த⁴னஞ்ஜய: ॥ 7௦ ॥

வேண்டும்வரமும் பொருளுமாய் யாண்டும்பக்தர்க் கருளுவான்
வேண்டுவன யாவும்கொண்ட வெற்புடைய பொருளுமாம்
அழகினுக்கொர் அழகிவன் அழைத்திட  வருள்புரிபவன்
வரைமுறைப் படாமலெங்கும் படர்ந்தபுதிரு மானவன் 
வேகம்கொண்ட வேகமாம் எல்லையற்ற எல்லையாம்  

__________________
 Prev            First           Next 

No comments:

Post a Comment