Friday, October 31, 2014

1.12. எங்கும் இறை பிரம்மம்



எங்கும் இறை பிரம்மம்


1.கரந்ததே பரந்தது பரந்ததால் கரந்தது
2.நிறைந்ததே குறைந்தது குறைந்ததால் குறைந்தது
3.சிறந்ததே இருந்தது இருந்ததால் சிறந்தது
4.மறந்ததே இருந்தது இருந்ததால் மறந்தது
________________
  1. ஒவ்வொரு அணுவின் உள்ளும் கரந்து ( மறைந்து) இருக்கும் பிரம்மமே இவ்வையமாய்ப் பரந்தது. அது வையமாய்ப் பரந்து பெரிதானதால் நம்முடைய ஐம்புலனிலிருந்தும்,அறிவிலிருந்தும் மறைந்தது.
  2. முழுதும் நிறைந்த ப்ரம்மம், நம்முடைய குறையால் முழுதாக உணரப்படாமல் குறைவாகத் தெரிகிறது.
  3. இவ்வாறாக சிறப்பு மிக்க பிரம்மம் என்றும் இருக்கும்படியான ஆதியாக காலத்தைக் கடந்து இருக்கின்றது.அது அவ்வாறாக ஆதியாய் இருப்பதாலேயே நம்மால் சிறப்புடையதாகப் போற்றத் தக்கது
  4. இவ்வாறாக சிறப்பு மிக்க பிரம்மம் தன்னையே மறந்து செயலற்று சாட்சி பூதமாய் இருப்பது (போல் தோன்றுவது- ஊழித் துயிலில்), தானுமாக எல்லாவற்றிலும் இருப்பதாலேயே. அதன் மறதியே நினைப்புமாக (Supra-conciousness) இருக்கிறது.  செயலற்ற அதன் தோற்றமே அதன் செயலாக்கத்தால் தான்.

______________________

No comments:

Post a Comment