Saturday, November 1, 2014

4. சுய நலம்

சுய நலம்



சோறுபதம் ஆகும்வேகும் பஞ்சபூத நெருப்பிலே
கூறுகெட்ட நெஞ்சுபோகும் ஞானபோதப் பிறப்பிலே
எனதுதனது எனக்குஎன்ற எண்ணம்கொண்ட பிறப்பிலே
மூசுக்காற்றும் மூச்சுவாங்கும் சுயநலத்தி ணறலிலே
தனது-எனக்கு என்றபேரை ஊரும்-மறைவில் எள்ளுமே
தனது-பேரை நினைக்கும்-பேர்க்கும் அவரின்-பேர்நி.. லைக்குமே
மறந்தும்கூட அவரைப்-போல இருக்கலாகா தென்னவே 
பெயரை-மறைத்து செய்த-உதவி சேவை-என்று ஆகுமே
 **பேரைக்-காக்க சேவைபோலப் பாரில்எதுவும் இல்லையே
பெயருக்காக செய்யும் செயலை சேவைஎன்ப தில்லையே

**பேரைக்-காக்க = சேவை செய்த பேரைக் காக்க அவருடையப் பெயரைக் காக்க

_________________________


No comments:

Post a Comment