Friday, July 19, 2019

Kanchi Varadhar Dharisanam





(கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை)


பல்லவி
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியைக் கண்டேன் காஞ்சியில்
நான்

சரணம்-1
நாள்-தோறும் காணாமல் தண்ணீர்க் குளத்தில்
அடி சென்று துயில் கொண்டு அருள்கின்ற தாதாவை
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியைக் கண்டேன் காஞ்சியில்
நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியைக் கண்டேன் காஞ்சியில்

சரணம்-2
தணியாத ஆவலில் பக்தர் பல கோடி கடல்போல
திரண்டாரே உயர்-காஞ்சி தனில்-கூடி

குடி-தண்ணீர் கூடவும் வேண்டாம் எனக் கூறி-கோவிந்தா என்று-கூவி

பணிந்து தன் உயிர்-தன்னை போக்கிட நெருக்காகி  சாகும்வண்ணம் அங்கே கூட்டம் உருவாகி
(3)
இனி தாமதம் செய்யலாகாதென்றுளமாகி
தேவா தேவா தேவா என்றே ஓடி 
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியைக் கண்டேன் காஞ்சியில்
நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியை கண்டேன் காஞ்சியில்



***
தரிசனம் பார்த்தவர்கள் பாக்கிய சாலிகள் 
தரிசனம் பார்க்க இயலாதவர்க அதி பாக்கிய சாலிகள். அவர்களுக்கு வரதன் சென்று தரிசனம் அளிப்பான்.
_________________



1 comment: