Sunday, May 3, 2020

25. என்ன ஒரு எளிமை (சின்னஞ்சிறு கிளியே ) **




என்ன-ஒரு எளிமை அம்மம்மா எங்கும்-இலை இலையே (3)
இந்தக்-கலி தனிலே-சங்கரர் போல உலகில் உண்டோ (2)
என்ன-ஒரு எளிமை அம்மம்மா எங்கும்-இலை இலையே
(MUSIC)
அய்யன்-முகத்..தினையே அம்மம்மா காண்பதும் ஓர்-வரமே (2)
தெய்வ தரிசனம்-மேல் சொல்லிங்கே ஏது-ஒரு பேறே (2)
தெய்வ தரிசனமும் வேறெங்கே ஏது இதன் மேலே
தெய்வ தரிசனமும் வேறெங்கே உண்டு இதன் மேலே
என்ன-ஒரு எளிமை அம்மம்மா எங்கும்-இலை இலையே
(MUSIC)
கோடி ஜனங்கள்-சென்றே அம்மம்மா அய்யனைக் காண்பதற்கே (2)
தேடி வருதல்-கண்டால் நம்முள்ளும் (2)
 கூடிடும்-ஆனந்தமே..
(MUSIC)
பேசும்-மொழி வழியாய் எளிதாய் யாரும்-உணரும்படி (2)
நேசத்துடன் வேறார்-உரைப்பார் வேதத்தின் வாழ்க்கை-வழி (2)
(MUSIC)
என்னத்தைக் கொண்டு செல்வாய் என்-பிள்ளாய் ஆசைகள் ஏனிப்படி (2)
என்றழகாய்-உரைத்தார் அம்மம்மா உன்மத்தம் போகும்படி
என்றெடுத்தே-உரைத்தார் அம்மம்மா உன்மத்தம் போகும்படி
(MUSIC)
நம்முடன் தான்-இருந்தார் நம்-கண்கள் எதிரில் காணும்படி (2)
நாம்-தொழும்  ஈசன்-அன்றோ அம்மம்மா  (2)
தெய்வமும் வேறு-உண்டோ ..தெய்வமும் வேறு-உண்டோ..
தெய்வமும் வேறு-உண்டோ..


No comments:

Post a Comment