Saturday, February 1, 2020

20. என்னதான் இருக்கோ(கண்டநாள் முதலாய்) **







(Lyrics aligned to KARAOKE)

என்னதான் இருக்கோ ஐயனின்-கண்களிலே (2)

என்னதான் இருக்கோ ஐயனின்-கண்களிலே
நெஞ்சினை ஊடியதைத் தடவிக்-கொடுக்கின்றதே 
(3)
என்னதான் இருக்கோ ஐயனின்-கண்களிலே
(MUSIC)
நெஞ்சலெப்போதும் குளிர்ச் சுனைதனைப்-போலே (2)

நெஞ்சலெப்போதும் குளிர்ச் சுனைதனைப்-போலே
நின்று இதம் தந்த காந்தவிழிப் பார்வையில்
(2)
என்னதான் இருக்கோ ஒன்றும் புரியலையே
நெஞ்சினை ஊடியதைத் தடவிக்-கொடுக்கின்றதே 
(3)

என்னதான் இருக்கோ ஐயனின்-கண்களிலே
(MUSIC)
ஈசன்-நுதல் கண்ணின் உக்கிரம் அதனில் இல்லை

ஈசன்-நுதல் கண்ணின் உக்கிரம் அதனில் இல்லை
பாசம்-எனும் பேரின் எல்லையும் அதற்கு இல்லை
(2)
ஏழேழுலகில் அதைப் போலொரு சாந்தமுண்டா.. ஆ
ஏழேழுலகில் அதைப் போலொரு சாந்தமுண்டா
விழி-எனும் அணைத்-தேக்கின் கருணையின் ஆறு-உண்டா
விழி-எனும் அணைத்-தேக்கின் கருணையின் ஆறு-உண்டா
என்னதான் இருக்கோ ஐயனின்-கண்களிலே
நெஞ்சினை ஊடியதைத் தடவிக்-கொடுக்கின்றதே
என்னதான் இருக்கோ ஐயனின்-கண்களிலே


No comments:

Post a Comment