உலகைப் படைத்த பிரமன்நீ
அதனைக் காக்கும் விஷ்ணுநீ
அண்ட மடங்கும் ஊழிலும்
நின்று நிலைக்கும் சிவனும்நீ
வித்து மான முதலும்நீ
செத்தும்வாழ முடிவும்நீ
சத்தி யத்தின் பாசம்நீ
சக்தி ரூபத் தந்தைநீ
நின்றி ருக்கும் ஆதிநீ
வென்றி ருக்கும் வெற்றிநீ
வென்றி ருக்கும் வெற்றிநீ
சென் றடைய கதியும்நீ
என்றும் ஆத்ம சோதிநீ
போரில் வீழ்ந்த வீடுமர்
கூறும் வாயி லாகநீ
பாரில் வந்த கண்ணனாய்
கூறும் நாம மாயிரம்
கூறும் நாம மாயிரம்
பற்றி யுந்தன் பாதமே
ஒன்றி நாமம் சொல்லிட
போற்றி யுன்னைப் பாடிட
வெற்றி வெற்றி வெற்றியே..!
ஒலி வடிவில்-AUDIO
Click on the links below
-----------------------------------
எழுத்து வடிவில் - TEXT
Click on the links below

No comments:
Post a Comment