Monday, May 1, 2023

தெய்வத்தின் குரல்-Voice of GOD

These are all Youtube Playlist. Watch on Youtube for better experience and ease of use.


PART 1 (WIP)

 


PART 2


PART 3


PART 4


PART 5


PART 6


PART 7





Wednesday, March 8, 2023

22.உய்வு


உன்னை நினைக்கப்பல மந்திரங்கள் எனக்கெதற்கு
விண்ணைப் பிளக்கும்-விதம் கோஷங்கள் ஏன்-எதற்கு
என்னை நனைத்து-உந்தன் ஈரெழுத்து பேரிருக்கு
என்றே நினக்க-மனம் விட்டதுவும் தானகன்று
சென்றே உன்னுருவே என்-நெஞ்சு முழுது-நின்று
நன்றே எனக்கரிய அனுபவங்கள் அளிக்க-எண்ணி
ஒன்றே என-இருந்த அவ்வுருவும் தானகன்று
சென்றே வெற்றிடத்தைப் *பொற்றிடமாய் மாற்றி-அதில்
கற்றே விளங்காத கற்றைப் பேரொளியை
சற்றே தான்-காட்டி மற்றைக் கருமங்கள்
சற்றேதும் இல்லைஎன்றே அன்பின் பேரொளிக்கே
என்றும் ஏங்குகின்ற நெஞ்சில்-உந்தன் கருணையினால்
சொல்லில் விளங்காத ஈடில்லா பேரமைதி
என்னில் ஸ்புரித்து-எழ என்ன-அது எனநினைக்க
எண்ணம்-தான் இல்லாமல் இருக்குமந்த உணர்வினில்-நான்
என்றென்றும் திளைத்திருக்கும்
நிலையை நிலையாக
நீ அருள நினைத்தனை என்- உய்வைக் காட்டியதை
பொய்யே என-நினைக்கும் இவ்வுலக மாயையினில்
நோயே எனை-நினைந்தே பரிகாரம் தானுரைப்பார்
பேயே எனத்தொடரும் வினைவிளைவு என்றுரைத்தே
பூஜை பல-செய்தேன் என்று-எனைத் தேற்றிடுவார்
அய்யே உனையன்றி எனையன்றி உண்மைதனை
யாரறிவார் ... யாரறிவால்... தானறிவாரோ?!

*பொற்றிடம்=பொன்னின் திடம்
புடம் போடப் போட தன்னை அழகாக மாற்ற ஏதுவாக இடமளிக்கும்

Tuesday, May 17, 2022

27.ஹரஹர சங்கர(மலர்களிலே பல நிறம் கண்டேன்

ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே

ஜெய ஜெய சங்கர என்றிடவே பவமாயங்கள் ஓடிடும் காற்றெனவே
ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே
music

நான் மறை சாத்திரம் அழகாக மானிட வாழ்க்கையின் விடிவாக (2)
புரிந்திட நமக்கும் எளிதாக-அவர் உரைத்தார் தெய்வத்தின் குரலாக (2)
ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே
Music

ரோகங்கள் போக்கிடும் அருள்நாதா லோகத்துக்கே அருள் குருநாதா (2)
பாரினுக்கே நீ ஒருமாதா எனப் போற்றிட அலைமனம் அடங்காதா (2)
ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே
ஜெய ஜெய சங்கர என்றிடவே பவமாயங்கள் ஓடிடும் காற்றெனவே
ஹரஹர சங்கர என்றிடவே பல பாவங்கள் விலகிடும் பார் உடனே

 

FIRST Page


Monday, December 28, 2020

26. கண்ணிரண்டில் வழிந்தோடும்(எண்ணிரண்டு பதினாறு வயது) **

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
(Short Music)
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர்-நெஞ்சிருந்தே பொங்கிவரும் கருணை-என்னும் ஆறு  
(2)
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
 (MUSIC)

அந்த-சிவன் முடிவெடுத்தான் மண்மீது பிறந்தான் 
தெய்வமுனி சங்கரரின் வடிவத்திலே இருந்தான் 
(2)
தெய்வமுனி சங்கரரின் வடிவத்திலே சிறந்தான்
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர்-நெஞ்சிருந்தே பொங்கிவரும் கருணை-என்னும் ஆறு  
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
(MUSIC)

பாரதத்தை நடையினிலே ஜாலமெனக் கடந்தார் 
ஞாலமுள்ள மனிதர்-கண்ணை ஞானமுனி திறந்தார்
(2)
ஞாலமுள்ள மனிதர்-கண்ணை ஞானமுனி திறந்தார்
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர்-நெஞ்சிருந்தே பொங்கிவரும் கருணை-என்னும் ஆறு  
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
 (MUSIC)

திட்டிப்-பேசும் பகைவரையும் கடிந்துகொள்ள மறுக்கும் (2) 
தன் பிள்ளை-போல அவரையுமே பொறுக்கும்-அவரின் உள்ளம்
பிள்ளை-போல அவரையுமே பொறுக்கும்-அன்னை உள்ளம் 
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர்-நெஞ்சிருந்தே பொங்கிவரும் கருணை-என்னும் ஆறு  
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு


FIRST Page

 

Wednesday, May 13, 2020

21 சாதனை





நாளும்-கோளும் நேரம்-மற்றும் இடமும்-உடையும் சின்னமும் 
பாலும்-தேனும் நெய்யும்-இன்னும் அவிகள்-சொரியும் யக்ஞமும்
அலையின்-மாலன் மலையின்-முருகன் சிவனும்-என்ற பகுப்பையும் 
கடந்து-நெஞ்சை உள்-நிறுத்தி ஒன்றிலே-எக்..கணத்திலும் 
வைத்திருக்கும்-நந்நிலை எதையும்-கடந்த பெருநிலை 
 தன்னை-யன்றோ சாதனையாய்ச் சொல்லுதந்த நான்மறை



Sunday, May 3, 2020

25. என்ன ஒரு எளிமை (சின்னஞ்சிறு கிளியே ) **




என்ன-ஒரு எளிமை அம்மம்மா எங்கும்-இலை இலையே (3)
இந்தக்-கலி தனிலே-சங்கரர் போல உலகில் உண்டோ (2)
என்ன-ஒரு எளிமை அம்மம்மா எங்கும்-இலை இலையே
(MUSIC)
அய்யன்-முகத்..தினையே அம்மம்மா காண்பதும் ஓர்-வரமே (2)
தெய்வ தரிசனம்-மேல் சொல்லிங்கே ஏது-ஒரு பேறே (2)
தெய்வ தரிசனமும் வேறெங்கே ஏது இதன் மேலே
தெய்வ தரிசனமும் வேறெங்கே உண்டு இதன் மேலே
என்ன-ஒரு எளிமை அம்மம்மா எங்கும்-இலை இலையே
(MUSIC)
கோடி ஜனங்கள்-சென்றே அம்மம்மா அய்யனைக் காண்பதற்கே (2)
தேடி வருதல்-கண்டால் நம்முள்ளும் (2)
 கூடிடும்-ஆனந்தமே..
(MUSIC)
பேசும்-மொழி வழியாய் எளிதாய் யாரும்-உணரும்படி (2)
நேசத்துடன் வேறார்-உரைப்பார் வேதத்தின் வாழ்க்கை-வழி (2)
(MUSIC)
என்னத்தைக் கொண்டு செல்வாய் என்-பிள்ளாய் ஆசைகள் ஏனிப்படி (2)
என்றழகாய்-உரைத்தார் அம்மம்மா உன்மத்தம் போகும்படி
என்றெடுத்தே-உரைத்தார் அம்மம்மா உன்மத்தம் போகும்படி
(MUSIC)
நம்முடன் தான்-இருந்தார் நம்-கண்கள் எதிரில் காணும்படி (2)
நாம்-தொழும்  ஈசன்-அன்றோ அம்மம்மா  (2)
தெய்வமும் வேறு-உண்டோ ..தெய்வமும் வேறு-உண்டோ..
தெய்வமும் வேறு-உண்டோ..